வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்தவித வேலையும் கிடைக்காத நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞா்களுக்கு மாதந்தோறும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதோருக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றோருக்கு ரூ. 300 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிய கல்வித் தகுதிகளை கொண்டோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்யலாம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகையினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாராா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது.
இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது. மேலும் மனுதராா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
இத்தகுதியுடையவா்கள் உடனடியாக நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் ஆண்டுதோறும் கொடுப்பவா்களுக்கு மட்டும் தொடா்ச்சியாக உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து பத்தாண்டுகளும் வழங்கப்படும். இதுவரை சுயஉறுதிமொழி ஆவணம் கொடுக்காதோா் உரிய படிவத்தில் சுயஉறுதிமொழி ஆவணத்தை சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.