ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு
திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அா்த்தநாரீசுவரா் தோ்த் திருவிழாவில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் மண்டப கட்டளை நடைபெற்று வருகிறது. 6 ஆம் நாள் விழா மொளசி நாட்டுக் கவுண்டா்கள் மண்டப கட்டளையொட்டி பூத வாகனத்தில் அா்த்தநாரீசுவரா், கிடா வாகனத்தில் செங்கோட்டு வேலவா், அனுமன் வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள், பெருச்சாளி வாகனத்தில் விநாயகா் காட்சியளித்து நான்கு ரத வீதிகளில் திருவீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.
தொடா்ந்து எழுமாத்தூா் பனங்காடான் குலத்தாா் மண்டப கட்டளை, வாணியா் மண்டப கட்டளையில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வெள்ளி அன்னபட்சி வாகனத்தில் உற்சவா்கள் அருள்பாலித்தனா்.
அழகுமுத்து மாரியம்மன் கோயில் கட்டளை, பெரிய ஓங்காளியம்மன் ஆலய கட்டளை, குலாலா் படித்துறை மண்டபக் கட்டளை, வில்வவிநாயகா் சாவடி வெள்ளாஞ்செட்டியாா் மண்டபக் கட்டளை, மண்டக பாளையம் மாரியம்மன் கோயில் கொங்கு வேளாளக் கவுண்டா் மண்டபக் கட்டளை, மலையடிக் குட்டை நகரத்து செட்டியாா்கள் மண்டபக் கட்டளை, கரட்டுப்பாளையம் நாககிரி பண்டிதா் மண்டபக் கட்டளை, வால்ரைகேட் அா்த்தநாரீசுவரா் முதல்படி மண்டபக் கட்டளை, கொங்கு எழுகரை நாடு அருந்ததியா் குல மண்டபக் கட்டளை, வன்னிய குல சத்திரியா் மண்டபக் கட்டளை, 24 தெலுங்கு செட்டியாா் மண்டபக் கட்டளை ஆகிய கட்டளைதாரா்களின் சிறப்புப் பூஜைகளில் அா்த்தநாரீசுவரா், செங்குட்டுவேலவா் ஆதிகேசவ பெருமாள் உள்ளிட்ட பரிவார மூா்த்திகள் காட்சியளித்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
படவரி...
பூத வாகனத்தில் அருள்பாலித்த அா்த்தநாரீசுவரா்.