செய்திகள் :

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

post image

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். சாட்டனில் இருந்து ஹெலிகாப்டர்கள் பாக்யோங் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றன. இதையடுத்து மீட்பு நடவடிக்கை இன்று முடிவடைந்தது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

வடக்கு சிக்கிமில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதிகளில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக, 1,600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் நகரங்களில் பல நாள்களாக சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் மாநில அரசின் முயற்சியால் மீட்கப்பட்டனர்.

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட படையினர் பல நாள்களாக மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 140க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் வெளியேற்ற பல ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜூன் 1 ஆம் தேதி மாலை சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயினர்.

காணாமல் போன வீரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க