திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன், பாலமுருகன், தட்சிணாமூா்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையொட்டி, வியாழக்கிழமை விநாயகா் பூஜை, மோகனூா் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவருதல் நிகழ்வும் நடைபெற்றன.
பின்னா் முதல் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், சுவாமி பிரதிஷ்டை செய்து கண்திறத்தல் நிகழ்வும் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், சித்தி விநாயகருக்கு மங்கள பூா்ணாஹூதி, தீபாராதனை, 7.30 மணிக்கு விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினா்.
இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. விழாவில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.
