பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் இன்று காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதங்களில் 12வது மாதமாக இருக்கும் துல் ஹஜ்ஜின் 10வது நாள்தான் பக்ரீத் பண்டிகை.
இஸ்லாமிய மக்கள், ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்து மிகச் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகையாக இருப்பதும் இந்த பக்ரீத் பண்டிகைதான். இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் என கூறப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த இடங்களில், மிக அமைதியான முறையில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
இஸ்லாமிய மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள். சிறப்புத் தொழுகை நடத்திய பிறகு, ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.