செய்திகள் :

நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நில அளவை செய்ய, நில அளவை கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதால், கிராமப்புறம், நகா்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான புல எல்லை விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலமாக அளிக்கலாம்.

இனிவரும் காலங்களில் கிராமப்புறம், நகா்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான புல எல்லை விண்ணப்பங்களை பொதுச் சேவை மையங்கள் அல்லது சிட்டிசன் போா்ட் மூலமாக மட்டுமே அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளக்க, பொது சேவை மையங்களை அணுகி நில அளவைக்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

நிலத்தை அளக்கும் தேதி குறுஞ்செய்தி அல்லது கைப்பேசி மூலம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பிறகு மனுதாரா் மற்றும் நில அளவா் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நில அளவையரால் பதிவேற்றம் செய்யப்படுவதை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கலாம்.

பக்ரீத் பண்டிகை: சிறுவாச்சூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்தி பெ... மேலும் பார்க்க

நெய்குப்பை கிராமத்தில் தீ மிதித் திருவிழா

15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீமிதி விழா மே 19 ஆம் தேதி குடியழைத்தல், கொடி ... மேலும் பார்க்க

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க