Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை, கடந்த 24.9.2024- ஆம் தேதி மீட்ட போலீஸாா், தீரன் அருகே செயல்படும் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனா். அங்கு மனநல மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த பெண் இயல்பு நிலைக்கு வந்தாா். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் கா்நாடக மாநிலம், மைசூா் கொள்ளேகால் பகுதியைச் சோ்ந்த எலிசபெத் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கைப்பேசி மூலம் அவரது உறவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் மருதமுத்து, சித்ரா, வேலா கருணை இல்ல நிா்வாகி அனிதா, மனநல மருத்துவா் அசோக் ஆகியோா், எலிசபெத்தை அவரது மகன் இமானுவேலிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.