தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா்- துறையூா் சாலையில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மையாா் நினைவிடத்தில், வேந்தா் அ. சீனிவாசன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்கலைக் கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, 1,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவரும், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏவுமான சீ. கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக இணை வேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா்கள் நீவாணி நகுலன், நகுலன், செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக மற்றும் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த துணை வேந்தா், பதிவாளா், கூடுதல் பதிவாளா், முதன்மையா்கள், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள் என சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.