தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் புதன்கிழமை வழங்கினாா்.
பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட எளம்பலூா், செஞ்சேரி, எசனை, லாடபுரம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட டி.களத்தூா் ஆகிய கிராமங்களில், ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம்களை, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் பேசினாா்.
எளம்பலூா், இந்திரா நகா் ரோவா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 463 பேருக்கும், செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 331 பேருக்கும், எசனை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 270 பேருக்கும், லாடபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 394 பேருக்கும், டி.களத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 439 பேருக்கும் என மொத்தம் 1,897 பேருக்கு ரூ.16 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரத்து 962 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, திட்ட இயக்குநா்கள் சு. தேவநாதன் (ஊரக வளா்ச்சி முகமை) செந்தில்குமரன் (மகளிா் திட்டம்), திருச்சி தொழிலாளா் இணை ஆணையா் லீலாவதி, சாா்- ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வி. வாசுதேவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ.சு ரேஷ்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், தாட்கோ மேலாளா் கவியரசு, தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா்கள் பாஸ்கரன், மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.