செய்திகள் :

"என்னுடைய ரூ.14,000 கோடியை... நான்தான் பாதிக்கப்பட்டவன்" - வங்கிகள் மீது விஜய் மல்லையா புகார்

post image

விஜய் மல்லையா - இந்தப் பெயரை இந்தியாவில் எவரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல பிசினஸ்களைச் செய்து வந்த பிசினஸ்மேன் வங்கிகளில் தான் வாங்கிய கடனை அடைக்காமல் வெளிநாட்டிற்கு ஓடியவர் ஆவார். இன்னமும் இந்தியாவில் இவர் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ள விஜய் மல்லையா, தான் கடன் வாங்கிய வங்கிகளைக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது...

"என்னுடைய கடன் தொகையும், 11.5 சதவிகித வட்டியும் சேர்த்து நான் கட்ட வேண்டிய மொத்தத் தொகை ரூ.6,203 கோடி. ஆனால், வங்கிகள் என் சொத்துகள் மூலம் ரூ.14,000 கோடியைப் பறிமுதல் செய்துள்ளன.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

அதுகுறித்த வங்கி ஸ்டேட்மென்ட் கூட என்னிடம் கொடுக்கவில்லை. இதற்காக நான் வழக்கறிஞர் மூலமும் வங்கிகளுக்குக் கடிதம் வழங்கியுள்ளேன். தனிப்பட்ட முறையிலும் கடிதம் வழங்கியுள்ளேன்.

கடைசியாக, இதுகுறித்து பேச மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்று வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், வங்கிகள் அதை மறுத்துவிட்டன.

அதனால் தான், நான் கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளேன். ஆக, இவற்றால் நான்தான் பாதிக்கப்பட்டு உள்ளேன்".

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க