செய்திகள் :

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

post image

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணி தொடரை வென்றது, கொண்டாட்ட நிகழ்வுகளில் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கரும்புள்ளியாக மாறியுள்ளது.

RCB Celebration
RCB Celebration

யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர்?

காவல்துறையினர் கூறுவதன்படி, RCB -ன் உயர் மார்க்கெட்டிங் அதிகாரி நிகில் சோசலேவும் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட தயாரானபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.

சோலே RCB அணியின் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும், சமூக வலைத்தள பக்கங்களையும் கையாண்டு வந்துள்ளார். அணி நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பதும் இவர்தானாம்.

இவரைத் தவிர, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெடைச் சேர்ந்த சுனில் மேத்தியூ (துணைத் தலைவர், ஐபிஎல் நிகழ்வுகளைக் கையாள்பவர்), கிரண், சுமந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நெரிசல் நிகழ்வு குறித்து, மரணம் விளைவிக்கும் குற்றம் (கொலைக்கு சமமானதல்ல) பாரதிய நியாய சன்ஹீதாவின் பல பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

KSCA நிர்வாகிகள் தலைமறைவு

நேற்று (05.06.2025) கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ஆர்.சி.பி, கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் டி.என்.ஏ எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் - தலைமறைவாகியுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா மற்றும் பல மூத்த காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

பெங்களூரு பெருநகர பணிக்குழுவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங் உடனடி நடவடிக்கையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக விமர்சனம்

கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், பாஜக மரணங்களை வைத்து கேவலமான அரசியல் செய்கிறது என பதிலளித்துள்ளார் சித்தராமையா.

நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அரசு அதிகாரிகள் முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் ரேஸ்: முந்தப்போவது யார்? - மல்லுக்கட்டும் மாமன், மச்சான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியை தவிர மற்ற ஏழு தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இந்த நிலையில், திமுக மேலிடம், தொகுதி வாரியாக எ... மேலும் பார்க்க