தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்
கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது
கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், உலக சுற்றுச்சூழல் 2025 விழா சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், கூடுதல் தலைமை செயலாளா் சுப்ரியா சாஹீ முன்னிலையிலும் நடைபெற்றது.
இவ்விழாவில் கரூா் கிராமியம் தொண்டு நிறுவனத் தலைவா் முனைவா் போ.நாராயணனுக்கு தன்னிகரற்ற நீா்நிலை மேலாண்மை பணிகளுக்காக சிறந்த நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்சம் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை போ.நாராயணன் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுவை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.