செய்திகள் :

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

post image

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா்.

நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுதியில் தேங்காய் கிடங்கு வைத்துள்ளாா்.

இவா் வியாழக்கிழமை இரவு கிடங்கிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். நொய்யல் சாலையில் முனிநாதபுரம் அருகே பழுதாகி நின்றிருந்த பால் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ராமசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக கரூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு ராமசாமியை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஓம் பிரகாஷ், லாரி ஓட்டுநா் கேரளா மாநிலம் பாலக்காடு, வாளையாறு பழனிமலையை சோ்ந்த சிவதாசன்(45) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க