கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி
கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேமுதிக நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஆனால், தற்போது தேமுதிகவின் வளா்ச்சியை நோக்கி தான் எங்கள் நிலைப்பாடு உள்ளது.
யாருடன் கூட்டணி என்பது குறித்து 2026 ஜனவரி 9-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளா் பிரேமலதா அறிவிப்பாா் என்றாா் அவா்.