Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சைஃப்கோ சிமென்ட்ஸின் 60% பங்குகளை கைபற்றிய ஜே.கே சிமென்ட்!
புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமென்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமென்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்கும் முதல் பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக ஜே.கே. குழும நிறுவனம் உருவெடுத்துள்ளது.
இதனையடுத்து, சைஃப்கோ சிமென்ட்ஸின் நிர்வாக கட்டுப்பாட்டை தன் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜே.கே சிமென்ட்.
கையகப்படுத்தல் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஜே.கே. சிமென்ட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ்கிருஷ்ண சிங்கானியா, இந்த கையகப்படுத்துதலின் மூலம், ஜம்மு காஷ்மீரில் ஒரு வலுவான இருப்பை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.
அதே வேளையில், சைஃப்கோ சிமென்ட்ஸ் குடும்பத்தை ஜேகே சிமென்ட் குழுமத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஜேகே சிமென்ட் நிர்வாக இயக்குநர் ராகவ்பத் சிங்கானியா.
உலகளவில் வெள்ளை சிமென்ட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் ஜேகே சிமென்ட்ஸ், மொத்த வெள்ளை சிமென்ட் உற்பத்தி திறன் 1.12 மில்லியன் டன்னுடன் சுவர் புட்டி 1.33 மில்லியன் டன் உற்பத்தி செய்து வருகிறது.
இதையும் படிக்க: தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி