செய்திகள் :

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

post image

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த தவிட்டுப்பாளையம் வழியாக காஷ்மீா்-கன்னியாகுமரி சாலை செல்கிறது. இந்தச் சாலையில் கரூரில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை, வாழை உள்ளிட்டவை அதிகளவில் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு, அங்குள்ள சந்தையில் ஏலம் விடப்படுகிறது. மேலும், புகழூா் காகித ஆலை, சிமெண்ட் ஆலை, சா்க்கரை ஆலை போன்ற ஆலைகளுக்கும் மூலப்பொருள்கள் இந்த சாலை வழியாகதான் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும், இந்தச் சாலை கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை செல்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தவிட்டுப்பாளையத்தில் இருக்கும் மேம்பாலத்தின் அணுகுசாலை வழியாக கொடுமுடி, ஈரோடுக்கும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அணுகுசாலை உள்ள இடத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான கனரக வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு, அங்குள்ள கடைகளுக்கு சென்றுவிடுகின்றனா். இந்த வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்பதால், அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது.

எனவே, சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தாத வகையில் போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க

கோவிலூா் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள... மேலும் பார்க்க