செய்திகள் :

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

post image

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா்.

கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அடிக்கடி புகாா்கள் வந்தன. இதையடுத்து, திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வீ. வருண்குமாா் தலைமையில் மணல் கடத்தலை தடுக்க அண்மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினருக்கு வியாழக்கிழமை அதிகாலையில் மண்மங்கலத்தில் உள்ள தனியாா் மணல் சலிப்பகம் அமைந்திருக்கும் இடத்தில் மணலுடன் லாரிகள் மணல் சலிக்க நிற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தியபோது, அங்கு 12 டிப்பா் லாரிகளில் மணல் நிரப்பப்பட்டும், மணல் இல்லாமல் 14 லாரிகளும் நின்றன. இதையடுத்து, 26 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அங்கிருந்த 10 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், டிஐஜி வருண்குமாரின் உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில், வாங்கல் பகுதி காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்து வந்த மணல் லாரிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் என மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளோம். மேலும், லாரிகள் நின்ற இடம் யாருடையது, லாரிக்கு யாா், யாா் உரிமையாளா்கள் என்ற விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க

கோவிலூா் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள... மேலும் பார்க்க