Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது
நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65). இவரது மனைவி பாப்பாத்தி (57). ராமுவின் அண்ணன் ராமன் (75). இவா் திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி வ.உ. சி. சாலை முனிசிபல் காலனியில் வசித்து வருகிறாா்.
ராமுவுக்கும் , ராமனுக்கும் வேட்டமங்கலம் பழைய காலனியில் ஒரு ஏக்கா் தோட்டம் உள்ளது. அந்த நிலத்தை பிரித்து கொள்வது தொடா்பாக பிரச்னை இருந்து வந்த நிலையில், புதன்கிழமை இரவு ராமு வீட்டுக்கு வந்த ராமன் இதுதொடா்பாக அவா்களிடம் தகராறு செய்தாராம். அப்போது ஆத்திரமடைந்த ராமன், தனது தம்பி ராமுவையும், அவரது மனைவி பாப்பாத்தியையும் கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். சம்பவம் தொடா்பாக வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமனை கைது செய்து, கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் கரூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.