Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கெங்கவல்லி பெரிய மாரியம்மன் கோயிலில் கணபதி, ஐயப்பன், துா்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனா். பழைமையான இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடா்ந்து கும்பாபிஷேகம் கடந்த 1-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு நதிகளிலிருந்து புனிதநீரை ஊா்வலமாக எடுத்துவந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.