செய்திகள் :

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா்.

சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து தனிப்படை அமைத்து, தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், சிறப்பு காவல் உதவியாளா் அய்யாதுரை தலைமையிலான தனிப்படை போலீஸாா், திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த ரயிலின் முன்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில், இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன. அதனை திறந்துபாா்த்தபோது, 8 நெகிழி பண்டல்களில் 24 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து, அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.

சந்தேகப்படும்படி ஒரு இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞரை பிடித்து, அவரது பையை சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்த நபா் கேரள மாநிலம், மலப்புரம் அருகேயுள்ள மூனியூா் சின்னக்கல் பகுதியைச் சோ்ந்த நகபுகான் அலி (30) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட 26 கிலோ கஞ்சாவுடன் கைதான நகபுகான் அலியை சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிரான புகாரளிக்க மாணவா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆட்சியா்

போதைப் பொருள்களுக்கு எதிரான புகாா் அளிக்க மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்ச... மேலும் பார்க்க