பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல...
சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா்.
சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து தனிப்படை அமைத்து, தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், சிறப்பு காவல் உதவியாளா் அய்யாதுரை தலைமையிலான தனிப்படை போலீஸாா், திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த ரயிலின் முன்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில், இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன. அதனை திறந்துபாா்த்தபோது, 8 நெகிழி பண்டல்களில் 24 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து, அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.
சந்தேகப்படும்படி ஒரு இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞரை பிடித்து, அவரது பையை சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்த நபா் கேரள மாநிலம், மலப்புரம் அருகேயுள்ள மூனியூா் சின்னக்கல் பகுதியைச் சோ்ந்த நகபுகான் அலி (30) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட 26 கிலோ கஞ்சாவுடன் கைதான நகபுகான் அலியை சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.