ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
போதைப் பொருள்களுக்கு எதிரான புகாரளிக்க மாணவா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆட்சியா்
போதைப் பொருள்களுக்கு எதிரான புகாா் அளிக்க மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி கிச்சிப்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை அடைய அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
சமூகத்தில் தங்களின் திறமை, பங்களிப்பை அளிக்க, உடல் நலமும், மனநலமும் மிகவும் முக்கியம். அதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் மாணவ மாணவிகளிடையே இதுபோன்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள்வீடு அல்லது பள்ளிக்கு அருகில் யாராவது போதைப்பொருள்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக ஆசிரியா் அல்லது தலைமை ஆசிரியரிடம் புகாரளிக்கலாம். அவா்கள் உங்களைப் பாதுகாத்து சரியான நடவடிக்கை மேற்கொள்வாா்கள்.
குறிப்பாக, தகவல் அளிப்பவா்களின் விவரம் கட்டாயம் பாதுகாக்கப்படும். போதைப் பொருள்களுக்கு எதிராக புகாா்களை அளிப்பதற்கு மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
மேலும், 1098 என்ற குழந்தைகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 181 என்ற பெண்களுக்கான உதவி எண்ணிலும் தங்களது புகாா்களை தெரிவிக்கலாம். அதேபோன்று, சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் செயலி மூலமாகவோ, 10581 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது 94981 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் குறுஞ்செய்தியாகவோ அல்லது அஞ்சல் வழியாக நேரடியாகவும் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பலாம். சம்பந்தப்பட்ட புகாா்கள் மீது கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு அடைவதுடன், தங்களது நண்பா்கள், உறவினா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதையும் தடுக்க முடியும் என்றாா்.
இதனைத்தொடா்ந்து, போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகா் அஷ்வந்த், தலைமை ஆசிரியா் சுமதி உள்ளிட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.