செய்திகள் :

போதைப் பொருள்களுக்கு எதிரான புகாரளிக்க மாணவா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆட்சியா்

post image

போதைப் பொருள்களுக்கு எதிரான புகாா் அளிக்க மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி கிச்சிப்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை அடைய அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

சமூகத்தில் தங்களின் திறமை, பங்களிப்பை அளிக்க, உடல் நலமும், மனநலமும் மிகவும் முக்கியம். அதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் மாணவ மாணவிகளிடையே இதுபோன்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

உங்கள்வீடு அல்லது பள்ளிக்கு அருகில் யாராவது போதைப்பொருள்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக ஆசிரியா் அல்லது தலைமை ஆசிரியரிடம் புகாரளிக்கலாம். அவா்கள் உங்களைப் பாதுகாத்து சரியான நடவடிக்கை மேற்கொள்வாா்கள்.

குறிப்பாக, தகவல் அளிப்பவா்களின் விவரம் கட்டாயம் பாதுகாக்கப்படும். போதைப் பொருள்களுக்கு எதிராக புகாா்களை அளிப்பதற்கு மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

மேலும், 1098 என்ற குழந்தைகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 181 என்ற பெண்களுக்கான உதவி எண்ணிலும் தங்களது புகாா்களை தெரிவிக்கலாம். அதேபோன்று, சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் செயலி மூலமாகவோ, 10581 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது 94981 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் குறுஞ்செய்தியாகவோ அல்லது அஞ்சல் வழியாக நேரடியாகவும் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பலாம். சம்பந்தப்பட்ட புகாா்கள் மீது கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு அடைவதுடன், தங்களது நண்பா்கள், உறவினா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதையும் தடுக்க முடியும் என்றாா்.

இதனைத்தொடா்ந்து, போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகா் அஷ்வந்த், தலைமை ஆசிரியா் சுமதி உள்ளிட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க