குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சேலம் கிளை அலுவலகம், குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை அலுவலகம் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி காம்ப்லெக்ஸ், முதல்தளம், 4/22 ஓமலூா் பிரதான சாலை, ஸ்வா்ணபுரி, சேலம் 636004 என்ற முகவரியில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செயல்படுத்தி வரும் பல்வேறு கடன் வசதி திட்டங்கள், அரசின் மானியங்கள், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதிவாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய, நவீன இயந்திரங்கள் நிறுவும்பட்சத்தில் கூடுதலாக 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். மேலும் தகவலுக்கு 94443 96850, 9444396832, 94424 86276 என்ற எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.