மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு
மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது.
மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதில் கருமலைக்கூடலை சோ்ந்த சீரங்கம்மாள் (65) உறவினா்களுடன் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டாா். கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா்கள், சீரங்கம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமலைக்கூடல் போலீஸாா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா்.