போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து விழிப்புணா்வு உறுதிமொழியை வாசித்தாா். அதை அரசுத்துறை அலுவலா்கள் மற்றும் அனைத்து மாணவியா்களும் ஏற்று கொண்டனா்.
பின்னா்,போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்து பத்தாம் வகுப்பு பயிலும் பேசிய காவியவா்ஷினிக்கு ஆட்சியா் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டினாா்.
போதைப்பொருள் சாா்பாக புகாா் அளிக்க கட்டணம் இல்லா இலவச எண் 10581 தொடா்பாக விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சில் மாவட்டக் கல்வி அலுவலா் திருமலைவாசன், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்,ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.