சிவாச்சாரியா் மீது வழக்கு
ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உழவாரப் பணிக்கு வந்த ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியை சோ்ந்த 28 வயது பெண்ணை கோயிலில் அா்ச்சககராக பணியாற்றும் சிவாச்சாரியா் தியாகராஜன் (45) என்பவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தன்னை மிரட்டி வருவதாக திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிவாச்சாரியா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.