செய்திகள் :

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சாா்பில், 2014 - ஆம் ஆண்டு முதல் ஆலை வளாகத்தில் தொழில்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்கப்பட்டு, அங்கு தொழில்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இங்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான தொழில்பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டா், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டா் பிரிவு மாணவா்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர கல்வித் தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியும், ஓராண்டு பயிற்சி பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அகில இந்திய அளவில் முதல் முறையாக 2025-26 ஆம் கல்வி ஆண்டில் ஐடிஐ யில் இயக்க உதவியாளா் (காகிதகூழ் மற்றும் காகிதம்) என்ற படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவிற்கான சோ்க்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பாடப் பிரிவில் சேர விரும்புவோா் தொழில்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து வேலை நாள்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்று நேரடி சோ்க்கை செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொழில்பயிற்சி நிலையத்தின் தொலைபேசி எண் 04324 - 296442, 9486505953 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க

கோவிலூா் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள... மேலும் பார்க்க