செய்திகள் :

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

post image

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக அப்பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோயிலை திறக்க பூசாரி வந்தபோது, கோயில் இரும்பு கேட்டிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலினுள் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பூசாரி செல்வராஜ் அளித்த புகாரின்பேரில், விராலிமலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க

அங்கன்வாடி பெண் ஊழியரை கட்டிப்போட்டு 15 பவுன் நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த அங்கன்வாடி பெண் ஊழியரை கட்டிப்போட்டு 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். விராலிமலையை அடுத்துள்ள வடுகபட... மேலும் பார்க்க