கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரியாக அப்பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் இருந்து வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கோயிலை திறக்க பூசாரி வந்தபோது, கோயில் இரும்பு கேட்டிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலினுள் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பூசாரி செல்வராஜ் அளித்த புகாரின்பேரில், விராலிமலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.