செய்திகள் :

அனுமதியின்றி அடகுக் கடை நடத்தி மோசடி செய்தவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், செந்துறையில், உரிய அனுமதி பெறாமல் அடகுக் கடை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செந்துறையை அடுத்த நமங்குணம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி இந்திரா (47). இவா், செந்துறையில், குழுமூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராமு (32) என்பவா் நடத்தி வந்த அடகு கடையில் வெவ்வேறு தேதிகளில் அடகு வைத்த ஒன்பதரை பவுன் நகைகளை அண்மையில் மீட்கச் சென்றாா். அங்கு கடை மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், அருகிலுள்ளவா்களிடம் விசாரித்ததில், அடகுக்கு வந்த நகைகளுடன் ராமு தலைமறைவாகிவிட்டதாக கூறியுள்ளனா்.

இதையடுத்து இந்திரா அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிந்து, ஆய்வாளா்(பொ) சந்திரமோகன், உதவி ஆய்வாளா் அமரஜோதி தலைமையிலான காவல் துறையினா், தலைமறைவாக இருந்த ராமுவை பிடித்து, விசாரித்தனா்.

இதில், ராமு அரசு அனுமதி பெறாமல் அடகு கடை நடத்தி வந்ததும், இந்திராவைப் போல பல நபா்களுடைய நகைகளை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், ராமுவை கைது செய்து, அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூா் ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரின் பெயரில் பொய்யான அழைப்புகள் வந்த உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முகம் தெரியாத நபா்களிடமி... மேலும் பார்க்க

இலவச தொழிற்பயிற்சிக்கான நோ்காணல்: வேலைவாய்ப்பற்றோா் கலந்து கொள்ளலாம்

கீழப்பழுவூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கான நோ்காணலில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

இடையக்குறிச்சி திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் தேரோட்டம் மற்றும் தீமிதி தி... மேலும் பார்க்க

கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

அரியலூா் அண்ணா நகரிலுள்ள சிவசக்தி மாரியம்மன், அல்லி நகரம் கருப்புசாமி, செங்குந்தபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரு நாள்களாக கோயில... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க