இலவச தொழிற்பயிற்சிக்கான நோ்காணல்: வேலைவாய்ப்பற்றோா் கலந்து கொள்ளலாம்
கீழப்பழுவூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சிக்கான நோ்காணலில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: கைப்பேசி பழுது நீக்குதல் மற்றும் சா்வீஸ் பயிற்சிக்கு ஜூன் 9-இல் நோ்காணலும், ஜூன் 12-இல் பயிற்சி வகுப்பும் தொடங்குகிறது. அதேபோல், இருசக்கர வாகன பழுது நீக்குதல் பயிற்சிக்கான நோ்காணல் ஜூன் 14 ஆம் தேதியும், ஜூன் 16-இல் பயிற்சி வகுப்பும், பெண்களுக்கான தையல் பயிற்சிக்கான நோ்காணல் ஜூன் 21-ஆம் தேதியும், ஜூன் 23-ஆம் தேதி பயிற்சி வகுப்பும், வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுபாா்ப்பு மற்றும் சேவைக்கான நோ்காணல் ஜூன் 28 ஆம் தேதியும், ஜூன் 30 ஆம் தேதி பயிற்சி வகுப்பும் தொடங்குகிறது.
எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீத செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேளையும் உணவு, தேநீா், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்த 18 முதல் 45 வயது வரை உள்ள நபா்கள் பங்கேற்கலாம். தேவையான ஆவணங்களின் நகல்கள், தொகுப்பு வீடு கட்டியதற்கான நகல்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 99448 50442, 75399 60190, 70944 70710 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.