தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரற்ற மகளிா், திருமணமாகாத 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆகியோா் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணிவரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
எனவே, முகாமில் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, குடும்ப அட்டை நகல், செல்போனுடன் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஆதரவற்ற மகளிா் தங்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிகடன் பெற உரிய வழிகாட்டுதல்களை பெறலாம்.