செய்திகள் :

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

post image

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

அரியலூரில் அக்கல்லூரியின் முதல்வா் சித்ரா கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசினாா். முதல் நாளான புதன்கிழமை (ஜூன் 4) கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

அறிவியல் பாடப்பிரிவுகளில் சோ்வதற்காக ஆா்வத்துடன் மாணவ, மாணவிகள் வருகைப் புரிந்தனா். அவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் வரவேற்றனா்.

வியாழக்கிழமை (ஜூன் 5) வணிகவியல் பாடப் பிரிவுக்கும், ஜூன் 6-இல் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கு வரும்போது புகைப்படம் உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் எடுத்துவர வேண்டும்.

விண்ணப்பித்தவா்களின் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் காணலாம். மேலும் சந்தேகங்களுக்கு, கல்லூரி தொலைபேசி 04329-222050 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம்.

ஜெயங்கொண்டம்: இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூன் 5) தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 6-இல் கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது என்று அக்கல்லூரியின் முதல்வா் (பொ) ராசமூா்த்தி தெரிவித்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் ... மேலும் பார்க்க

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய... மேலும் பார்க்க