பெர்சனல் லோன் போட்டு டூருக்கு செல்லும் மக்கள்! - எளிமையாகத் திட்டமிடுவது எப்படி?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சுற்றுப்பயணம் என்றாலே ஜாலி தானே. தினசரி வழக்கங்களை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு சில நாட்கள் ஹாயாக இருக்க நமக்கு கிடைக்கும் உற்சாக டானிக் தான் சுற்றுப்பயணம்.
முன்பு போல் இல்லாமல் குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒருமுறை சுற்றுலா செல்லும் தலைமுறையினர் இப்பொழுது தோன்றி உள்ளனர். மேற்கத்திய நாட்டினர் பற்றி இவ்வாறு சொல்வதுண்டு. அவர்கள் ஒரு வருடத்தில் 11 மாதம் கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தை ஒரு மாத சுற்றுப்பயணத்தில் செலவழித்து விடுவார்களாம்.
இந்தியாவிலும் சுற்றுப்பயணத்திற்கு திட்டம் போட்டு சேகரிக்கும் தலைமுறையினர் இப்போது தோன்றி இருக்கின்றனர். வேறு சிலர் ஒரு படி மேலே போய் பெர்சனல் லோன் போட்டும் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.

அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செல்லும் சுற்றுப்பயணங்கள் சரிவர திட்டமிட்டு செயல் படுத்தப்படாவிடில் மிஞ்சுவது மனக்கசப்பும் எரிச்சலும் தான்.
சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது நாமே திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளலாம். அவ்வாறு பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது நம்மை சரிவர வழி நடத்த அங்கு முன்பே சென்று வந்தவர்களிடம் இருந்து ”செய்வன, செய்யக்கூடாதவை” பற்றி கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
நாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் தர பல்வேறு சுற்றுலா தகவல் நிலையங்களும் இப்பொழுது காளான்கள் போல் தோன்றி உள்ளன. இவர்களிடம் இருந்தும் நாம் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இடங்கள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொள்ளமுடியும்.

அவ்வாறு செல்லும் இடங்களில் தங்குவதற்கு தேவையான ஹோட்டல் வசதிகள் பற்றிய விவரங்கள் கூகிள் தேடுதலில் எளிதாக கிடைக்கும். இது அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.
சீசன் நேரங்களில் செல்லும் பொழுது சிரமங்கள் தவிர்க்க இந்த ஹோட்டல்களில் முன்னரேயே பதிவும் செய்து கொள்ளலாம். செயளிகள் மூலம் பதிவு செய்தால் குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைக்கும்.
ஆனால் பொதுவாக தங்கும் கட்டணத்தை முன்னாலே செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டி இருக்கும். இந்த அறைகளை ஏதாவது காரணத்துக்காக நாம் உபயோகித்துக் கொள்ளமுடியவில்லை எனில் 24 மணி நேரத்துக்கு முன்னால் ரத்து செய்தால் நாம் முன்கட்டணமாக செலுத்திய தொகை பொதுவாக பிடித்தங்கள் இன்றி நமக்குத் திருப்பிக் கிடைத்துவிடும்.
இதே அறைகள் நேரடியாக அந்த ஹோட்டல்களிடம் சென்றால் சற்று கூடுதல் வாடகைக்கு கிடைக்கும்: ஆனால் நேரடியாக ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும்பொழுது அட்வான்ஸ் தொகை செலுத்தத் தேவை இருக்காது. நேரில் செல்லும்பொழுது தொகை செலுத்தினால் போதும்.
சமயங்களில் அவ்வாறு ஹோட்டல்களில் நேராக முன்பதிவு செய்துகொள்ளும் பொழுது சில இலவசங்கள் கிடைக்கலாம். காம்ப்ளிமென்ட்ரி காலை உணவு, பிக் அப்,ட்ராப் போன்றவைகள் அதில் அடங்கும். செயலிகள் மூலம் பதிவு செய்யும்பொழுது இந்த இலவசங்கள் கிடைக்காமல் போகலாம்.

அறைகள் முன்பதிவுகள் செய்து கொண்டு குடும்பமாக செல்லும்பொழுது தேவையற்ற அசௌகரியங்களை சந்திக்க நேரிடாது.
சுற்றுலா செல்லும்பொழுது ட்ரான்சிட் நிலையங்களில் சற்று தேங்க நேரிட்டால் ரயில் நிலையங்களில் இப்பொழுதெல்லாம் நல்ல வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள் அனைத்து வசதிகளுடன் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. புது தில்லி போன்ற ரயில் நிலையங்களில் ஒரு நாள் முழுதும் தங்கும் பிரயாணிகளை நான் பார்த்திருக்கிறேன்.
நீங்களாக தனித்துச் செல்லாமல் அரேன்ஜ்ட் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வீர்கள் எனில் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டுக்கும் கட்டமைக்கப்பட்ட பயண ஏற்பாடுகளை வழங்க சுற்றுலா ஏற்பாடு செய்யும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் எவ்வளவோ செயல்படுகின்றன.

மூத்த குடிமக்கள் இவ்வாறு வடிவமைக்கப்பட்ட சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதே சிறந்தது. இவ்வாறு வடிவமைக்கப் பட்ட பயணங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்தாரே கவனித்துக்கொள்வார்கள்.
நம்மையும், அவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தால் போதும். மற்ற அனைத்தையும் அந்த குறிப்பிட்ட நிர்வாகமே கவனித்துக்கொள்ளும். நாம் ஹாய்யாக பயணம் மேற்கொள்ள வேண்டியது தான்.
இவ்வாறு கம்பெனிகளிடம் நமது பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒப்படைக்கும்பொழுது நாம் ஒரு சிறந்த பெயர்பெற்ற நிறுவனத்தை அணுகுவதே உசிதம். இல்லாவிடின் நமது பட்ஜெட்டைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.அதிகம் செலவழித்தாலும் செலவழித்த பணத்திற்கு தகந்த திருப்தியும் கிடைக்காமல் போகலாம்.ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ஏமாற்றப்படுவீர்கள் அல்லது ஏமாறுவீர்கள்.

அதே போல் இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பயணங்களில் செல்லும் பொழுது குழுவாகச் செல்வது நமது செலவை கணிசமாக் குறைக்கும். தனித்துச் செல்லும்பொழுது நமக்கு என்று தனிப்பட்ட கவனம் அளிக்கப்பட்டாலும் குழுவாகச்செல்லும் மஜா இருப்பதில்லை.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் சென்றால் நமக்குத் தேவையான மருந்துகளையும் தேவையான அளவுகளில் எடுத்துச் செல்வது நல்லது. மேற்கத்திய நாடுகளில் நமக்குத் தேவையான மருந்துகள் கௌன்ட்டரில் கிடைப்பதில்லை. மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் தேவைப்படும். மருந்துகள் கிடைத்தாலும் மொத்தமாகவே கிடைக்கும்.சில்லறையாக கிடைப்பதில்லை. மேலும் இந்த மருந்துகளின் விலையும் கணிசமாக அதிகமாகவே இருக்கும்.
சில நேரங்களில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது விமானநிலையங்களில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இவ்வாறு கொண்டு செல்லும் மருந்துகள் சோதனையில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அப்பொழுது நம்மிடம் மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன்களும் மருந்துக்கடையில் வாங்கிய பணம் செலுத்திய பில்களும் தேவைப்படலாம்.

சுற்றுப்பயணம் அல்லாது வெளிநாட்டுப் பயணங்கள் நீண்ட காலத்துக்கு மேற்கொள்ளும் பொழுது அந்த ப்ரிஸ்க்ரிப்ஷன்களுடன் பாஸ்போர்ட் எண்ணைக் குறிப்பிட்ட மருத்துவரின் ஒரு கடிதத்துக்கும் தேவை ஏற்படலாம். இந்த மருந்து சம்பந்தப்பட்ட அறிவுரைகள் எல்லாம் … லாம் தான். அனைவருக்கும் இந்த தேவை கட்டாயம் எழும் என்று சொல்லமுடியாது. துபாய் செல்லும் பொழுது கசகசா கொண்டு செல்லக்கூடாது.
மேற்கூறப்பட்டவை சில பரிந்துறைகளே. அதே போல் சுற்றுப் பயணம் செல்லும்பொழுது அவசரத்தேவைக்கென ஒரு கிரெடிட் கார்டும் வைத்துக்கொள்வது நல்லது.
நீங்கள் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்.
-எஃப்.எம் பொனவெஞ்சர்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.