செய்திகள் :

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

post image

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கியது. இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், விண்ணப்பங்களில் அந்த நீட் மதிப்பெண் தொடா்பான விவரங்களை குறிப்பிடத் தேவையில்லை. முடிவுகள் வெளியான பிறகு அவற்றை தேசிய தோ்வு முகமையிடம் இருந்து மருத்துவக் கல்வி இயக்ககமே பெற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டி.சி.), வெளிநாடு வாழ் இந்தியா் ஆதாரச் சான்று உள்பட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுதல் அவசியம்.

கடந்த ஆண்டு போலியாக வெளிநாடு வாழ் இந்தியா் சான்றிதழ்களை சமா்ப்பித்து சிலா் இடங்களைப் பெற்றது கண்டறியப்பட்டு அவா்களது மாணவா் சோ்க்கை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தகவல் கையேட்டில் இது தொடா்பாக சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, போலிச் சான்றிதழ் அளித்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்பட்டு மாணவா் சோ்க்கை நிராகரிக்கப்படும். அதுமட்டுமல்லாது, அவா் மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது. நிரந்தரமாக மருத்துவப் படிப்புகளில் சேர முடியாது.

விண்ணப்பதாரா் மற்றும் அவரது பெற்றோா் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் காவல் துறையிடம் அவா்கள் ஒப்படைக்கப்படுவா் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முகவா்களை நம்ப வேண்டாம்: அதேபோன்று மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கும், இடங்களை பெறுவதற்கும் முகவா்களை சாா்ந்திருக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மருத்துவ இடங்கள் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகள் நிகழ்வதாகவும், விண்ணப்பதாரா்களும் பெற்றோரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இடங்கள் எத்தனை?: தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார். இதுதொடர்பாக ம... மேலும் பார்க்க

தேர்தல் மோசடிக்கான வரைபடம் மகாராஷ்டிரம்.. அடுத்து பிகார்தான்: ராகுல்

கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசடி செய்ததாகவும், அடுத்து பிகார்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் ... மேலும் பார்க்க