செய்திகள் :

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

post image

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் முதலாமாண்டு ஜூன் 12-ல் வருகிறது. ஆனால் முக்கிய விழா ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும், எனவே பிரதமர் மோடி அன்றைய தினம் மாநிலத்திற்கு வருகை தருவார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.

ஒடிசாவில் பாஜக தலைமையிலான மோகன் சரண் மஜ்ஹி அரசு அமைத்து ஜூன் 12ல் ஓராண்டு நிறைவுபெறுவதையடுத்து, மாபெரும் விழா நடத்த அரசு ஏற்பாடு செய்துவருகின்றது. பிரதமரின் நிகழ்ச்சி நிரலைக் கருத்தில் கொண்டு, முக்கிய விழா ஜூன் 20ல் நடைபெறும். இறுதி நிகழ்ச்சி நிரல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி, சமீபத்தில் புது தில்லிக்கு வருகை தந்திருந்தபோது ​​ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிறருக்கு முறையான அழைப்பை விடுத்திருந்தார்.

ஆண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அனைத்து ஒடிசா அமைச்சர்களும் மாஜி அரசின் முதலாமாண்டு விழா அட்டையை மக்களுக்கு வழங்க மாவட்டங்களுக்குச் செல்ல நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜிநாமா!

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர... மேலும் பார்க்க

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க