5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா...
இரண்டு நேரெதிர் உலகை கண்ட வியப்பு! - இமாச்சலின் அடல் சுரங்கப்பாதையில் ஓர் அபூர்வ அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
உலக அதிசயமான தாஜ்மஹாலை கண்டுகளித்த எங்களுக்கு இரண்டு நாட்களுக்குள் உலகின் நீண்ட சுரங்கப்பாதையை காணப்போகிறோம் அதில் பயணிக்கப் போகிறோம் என்ற செய்தியை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே சொன்னார்கள்.
லாஹௌல் ஸ்பிட்டியின் ரோஹ்தாங்கில் உள்ள அடல் சுரங்கப்பாதையை (Atal Tunnel) கடக்க நாங்கள் சென்றடைந்த போது நல்ல மழை மற்றும் கடுங்குளிர். வானுயந்த மரங்களும் , மேக கூட்டங்கள் , பனிசாரல் என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சொர்கலோகத்தில் மிதப்பதை போன்று இருந்தது

சுமார் 10 ,040 அடி உயரத்தில் உள்ள இந்த சுரங்கப்பாதை ரோவா ஃப்ளையர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் சுரங்கப்பாதை என்றும் சுமார் 9 கி.மீ நீளமுள்ளது என்றும் குறிப்புகளை மேற்கோள் காட்டி உடன் வந்த வழிகாட்டி விளக்கி கொண்டிருந்தார்.
இந்த சுரங்கப்பாதை உருவாக்கியதன் பயனாக மணாலிக்கும் லேவுக்கும் இடையிலான பயண தூரம் சுமார் 46 கி.மீ. குறைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
குளிர்காலங்களில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் எல்லைப் பகுதிகளுக்கு இடையே ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் துண்டிக்கப்படும் போக்குவரத்து இந்த சுரங்கப்பாதையின் மூலம் தடையில்லாமல் பயணிக்க முடிகிறது என்கிறார்கள்.

இந்த சுரங்கப்பாதை மணாலியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துந்தியின் தெற்கு முனையிலிருந்து தொடங்கி, வடக்கே லாஹவுல் பள்ளத்தாக்கில் உள்ள தெலிங் கிராமத்திற்கு அருகில் முடிகிறது.
குதிரைலாட வடிவிலான, இரட்டைப் பாதை சுரங்கப்பாதை ஐந்து மீட்டருக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டுள்ளதால் பெரிய மற்றும் கனரக லாரிகள் கூட அதன் வழியாக எளிதாக கடந்து செல்வதை பார்க்க முடிந்தது .

பசுமை போர்த்திய மலையிலிருந்து சுரங்கப்பாதையின் தெற்கு முனையத்தில் எங்கள் வாகனம் நுழைய ஆரம்பித்தவுடன் , கொஞ்சம் மெதுவாக செல்லும்படி கேட்டோம். அங்கங்கே வைக்கப்பட்டிருக்கும் வேக அளவின் குறியீட்டை காட்டி அதற்க்கும் குறைவான வேகத்தில் போகமுடியாது., இடையில் வாகனங்களை நிறுத்த முடியாது என்பதை எங்கள் ஓட்டுநர் இந்தியில் சொன்னதை ஓரளவுக்கு புரிந்துகொண்டோம்.
இரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படும் இந்த சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 150 மீட்டருக்கும் தொலைபேசி வசதி,, ஒவ்வொரு 60 மீட்டருக்கும் தீயணைப்பு குழாய், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் துல்லியமான தூர அளவீடுகளுடன் அவசரகால வெளியேற்றத்தையும், ஒவ்வொரு 2.2 கி.மீட்டருக்கும் திருப்புமுனை குகையையும், ஒவ்வொரு கி.மீட்டருக்கும் காற்றின் தர கண்காணிப்பு, ஒளிபரப்பு அமைப்பு மற்றும் ஒவ்வொரு 250 மீட்டருக்கும் சிசிடிவி கேமராக்களுடன் அமைக்கப்பட்டு போதுமான விளக்குகள் பொருத்தப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

இந்த சுரங்கப்பாதையின் தெற்கு முனையில் நுழைந்து , சிலிர்ப்பூட்டும் பயணத்தை முடித்து வடக்கு முனையத்தில் வெளியில் வரும்போது இரண்டு நேரெதிர் உலகை கண்ட வியப்பு நமக்கு .
காரணம் தெற்கு முனையத்தில் நாம் நுழைவதற்கு முன்பு காணும் பச்சை பசேல் உலகம் வடக்கு முனையத்தில் வெளியேறியும்போது வெண்பனி படர்ந்த மலைகளாகவும் நீர்வீழ்ச்சிகளும் நம்மை வரவேற்கிறது
உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள மிக நீளமான அடல் சுரங்கப்பாதை பயணம் மூலம் இயற்கையின் இரு துருவங்களையும் தொழிநுட்பத்தின் வளர்ச்சியையும் ஒரு சேர காண முடிந்தது .
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.