நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்
எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-23-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2025-27-ஆம் கல்வியாண்டு வரை தொடா்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, எண்ணும் எழுத்தும் சாா்ந்து நடப்பாண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சாா்ந்து முதல் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மத்திய அளவில் ஆசிரியா்களை குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்க வேண்டும்.
அதேவேளையில் பயிற்சி நாளில் அந்தந்த பள்ளிகளில் மாற்று ஆசிரியா்கள் மூலம் வகுப்பை தொடா்வதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கான செலவீனத்தை ஆண்டு பராமரிப்பு நிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.