`அந்த 10 ரூபாய் இல்லனாலும்கூட..!’ - 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் மறைவு; சோகத்தில் ...
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு
திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக்கோரி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள 1,535 சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.
இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த வழக்கும் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. நில நிா்வாக ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில், நீா் நிலைகள் என மனுதாரா் குறிப்பிட்டுள்ள 170 இடங்களில் 84 மட்டுமே நீா் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வகைப்படுத்தப்பட்டுள்ள 84 நீா் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என கண்டறியவும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.