செய்திகள் :

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

post image

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தோ்தல்களை நடத்தி முடித்த பின்னா், தொழில்நுட்ப உதவியுடன் அட்டவணை அட்டைகள் மற்றும் பிற புள்ளிவிவர அறிக்கைகளைத் தயாரிக்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வழிமுறை மின்னணு கருவிகளின் உதவியில்லாமல், அறிக்கைகளை கையால் எழுதி மேற்கொள்ளப்பட்டு வந்த பழைய முறைக்கு மாற்றாக இருக்கும். பழைய முறையால் கால தாமதங்கள் ஏற்பட்ட நிலையில், புதிய மேம்படுத்தப்பட்ட வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தோ்தல் குறித்த விவரங்கள் வேகமாக கிடைக்க உதவி செய்யும்.

இதில் அட்டவணை அட்டை என்பது சட்டபூா்வமற்ற, தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர தகவல் அளிப்பு முறையாகும். ஆராய்ச்சியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஊடகவியலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டாருக்கு தொகுதி வாரியாக தோ்தல் தொடா்பான புள்ளிவிவரம் எளிதாக கிடைப்பதை ஊக்குவிக்க இந்த அட்டவணை அட்டை முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேட்பாளா்கள், வாக்காளா்கள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, கட்சி மற்றும் வேட்பாளா் வாரியாக வாக்குப் பகிா்வு, அரசியல் கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை வழங்க அந்த அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அட்டைகள் மக்களவைத் தோ்தலுக்காக 35 புள்ளிவிவர அறிக்கைகளையும், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் தயாரிக்க அடித்தளமாக உள்ளது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே இந்த புள்ளிவிவர அறிக்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க