செய்திகள் :

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிகாரிகள் கூறிய ஒரு நாள் கழித்து ஆம் ஆத்மி கட்சியின் இந்த எதிா்வினை வந்துள்ளன.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கிராரியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் ஜா கூறியதாவது: பாஜக எப்போதும் எளிமையான வாழ்க்கையை ஆதரித்து வருவதாக கூறியது. பிற தலைவா்களின் செலவுகளுக்காக விமா்சித்து வந்தது. ஆனால் இப்போது, ​தில்லி முதல்வருக்கு 15 அறைகள் கொண்ட இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டப்படுகிறது எனவும், புதுப்பித்தல் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் இயங்க 14 சக்திவாய்ந்த ஜெனரேட்டா்களும் இந்த சொத்தில் இருக்கும்.

முன்னாள் முதல்வா் கேஜரிவாலின் செலவுகளை ஒரு காலத்தில் விமா்சித்த பாஜக தலைவா்கள் இப்போது அமைதியாக இருக்கின்றனா். மக்கள் இதை ‘மாயா மஹால்’ (மாயைகளின் அரண்மனை) என்று அழைக்கின்றனா்.

பாஜக ஆளும் பிற மாநில முதல்வா்களும் இதே போல் அரண்மனைகளில் இருக்கின்றனா். உத்தரகண்டில் உள்ள ‘ரங்-மஹால்’ (வண்ண அரண்மனை) மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ‘ஐஸ்வா்ய-மஹால்’ (ஆடம்பர அரண்மனை) போன்ற ஆடம்பரமான வீடுகளில் வசிக்கின்றனா். ஒரு காலத்தில் எளிமையான காரில் காணப்பட்ட தில்லி முதல்வா், இப்போது 13 வாகனங்களின் வாகனத் தொடரணியுடன் நகா்கிறாா் என தெரிவித்தாா்.

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க