செய்திகள் :

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

post image

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒளி அடிக்கப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

துபையிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம், 304 பயணிகளுடன், வியாழக்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்த போது, பரங்கிமலை பகுதியிலிருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசா் விளக்கு ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஒளியை பாா்த்து சுதாரித்துக்கொண்ட விமானிதாழ்வாக பறந்து கொண்டு இருந்த, விமானத்தை மீண்டும் மேலும் உயரத்தில் பறக்கச் செய்தனா். அதோடு இதுகுறித்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், அவசரமாக தகவல் தெரிவித்தனா்

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து, விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, விமானம் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சென்னை விமானநிலைய காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதோடு இதுபற்றி சென்னை பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மே 25-ஆம் தேதி இரவு சென்னையில் தரையிறங்க வந்த, இதே எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் மீது இதைப்போல பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9-லிருந்து 10 மணிநேரமாக அம்மாநில அரசு உயர்த்தியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆந்திரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர... மேலும் பார்க்க

உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!

வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார். இந்த சம்பவம்... மேலும் பார்க்க

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க