Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு
திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா் பயிற்றுநா் அண்ணாமலை தலைமை வகித்தாா்.
ஆசிரியா் சங்கீதா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ் பாபு வரவேற்றாா்.
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், பொருளாளா் தங்க.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா் தேவிகாராணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், திருக்கு பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டனா். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.