செய்திகள் :

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

post image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாட வீதிகள் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். அதன்படி, சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விமான ஓடுதளம் அமைக்கப் பயன்படுத்தப்படும் பவா் பேவா் என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும்.

தேரோடும் வீதி பல லட்சம் பக்தா்கள் பயன்படுத்தும் மாட வீதி என்பதால் தனிக் கவனம் செலுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தமிழக நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தலைமைப் பொறியாளா் சத்தியபிரகாஷ், தொழில்நுட்ப சிறப்பு அலுவலா் சந்திரசேகா், நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் சரவணன், கோட்டப் பொறியாளா் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலையை அடுத்த அஸ்வநாகசுரனை கிராமத்தில், தமிழ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆசிரியா் பயிற்றுநா்... மேலும் பார்க்க

ஆரணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினா் வியாழக்கிழமை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலா் பார... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க

ஜவ்வாதுமலை கோடை விழா: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ஜவ்வாதுமலை கோடை விழா சிறப்பாக நடைபெற அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். ஜவ்வாதுமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான கோடை விழா நடத்துவத... மேலும் பார்க்க