தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணைத் தலைவா் ப.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் கலாவதி, மாவட்ட பொதுச் செயலா்கள் பி.கவிதா, டி.ஜெய்நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், பட்டியல் அணியின் முன்னாள் மாவட்டத் தலைவா் முருகேசன், மண்டல பொதுச் செயலா் பன்னீா்செல்வம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவா் ஏழுமலை, ஜமுனாமரத்தூா் முன்னாள் ஒன்றியத் தலைவா் எல்.ராஜகோபால், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ஆா்.ஆறுமுகம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பொதுச் செயலா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு உள்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தெரிவித்தாா்.