கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்...
மனதை உருக்கும் மணாலி – அங்கு அப்படி என்ன தான் உள்ளது?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இது எனது முதல் பயணக் கட்டுரை. இதனை வாசிக்கும்போது, சில மாதங்களுக்கு முன் மேற்கொண்ட ஒரு மறக்க முடியாத சுற்றுலா உங்கள் கண்களுக்கு முன்னால் விரிகிறது என்பதே என் நம்பிக்கை.
சுற்றுலா என்றாலே மகிழ்ச்சி, புதுமை, மறக்கமுடியாத தருணங்கள், மற்றும் அனுபவங்களின் அடுக்கே. அதிலும், பனியால் போர்த்தப்பட்ட மலைகளின் மத்தியில் பயணித்த அனுபவம் என்றால்? அது வாழ்நாளில் ஒருமுறை உள்வாங்க வேண்டிய ஒரு சிறப்பாகவே இருக்கும்.
அப்படியொரு பயணமே, மணாலியைச் சுற்றி நாங்கள் செய்தோம்.

விமானம் ஏறும் முதல் தருணம்
நான் மற்றும் எனது நண்பர்கள் உட்பட ஐந்து பேர் இணைந்து கொண்டோம். நாங்கள் ஒரு ஆறு மாதம் முன்பாகவே இப்பயணத்தை திட்டமிட்டு டெல்லி வரை விமான டிக்கெட்டை முன் பதிவு செய்து வைத்திருந்தோம். பயணத்திற்கு ஒரு வாரம் முன்பு டெல்லியில் இருந்து மணாலிக்கு கார் ஏற்பாடு செய்து கொண்டோம். அணைத்து ஏற்பாடுகளும் முடிந்து பயணத்திற்கு தயாராக இருந்தோம்.
காலை 6 மணிக்கு விமானம் சென்னையில் புறப்பட தயாராக இருந்தது. இதுவே என் முதல் விமான பயணம். ஜன்னல் இருக்கை மேலும் பயணத்தை சிறப்பாக்கியது. 35000 அடியில் விமானம் சீறியது அலாதி அனுபவத்தை தந்தது.ஜன்னல் வழியே பூமியை ரசித்தது புது அனுபவம் . சில பல புகைப்படங்களை எடுத்து தள்ளினோம்.

விமான சிற்றுண்டி சுமாராகவே இருந்தது. 2.30 மணி நேர பயணத்திற்க்கு பிறகு புது டெல்லியை அடைந்தோம். புது டெல்லி விமான நிலையம் இனிதே எங்களை வரவேற்றது.அங்கே எங்களுக்காக நங்கள் புக் செய்த கார் ஓட்டுனுர் காத்திருந்தார்.
சிறிது தேடலுக்கு பிறகு அவரை கண்டுபிடித்தோம்.பின்பு அனைவரும் காரில் ஏறிகொண்டோம். அது ஒரு டொயோட்டா இன்னோவா கார். ஒரு நண்பருக்கு மட்டுமே சிறிது இந்தி பேச தெரியும். ஆகவே அதை வைத்து ஓட்டுனருடன் பேச சமாளித்து கொண்டோம்.
டெல்லியில் முதல் நாள்
எங்களின் ஐந்து நாள் பயணத்தில் முதல் நாள் டெல்லியை சுற்றி பார்த்தோம். முதல் இடம் Qutb minar. அதுவரை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்து படித்த Qutb minar சிலிர்ப்பை தந்தது.பிறகு இந்தியா கேட்,செங்கோட்டை,தாமரை கோவில் என்று அன்றைய பொழுது டெல்லியில் நிறைவு பெற்றது. அதன் பிறகு அங்கிருந்து மணாலி பயணம் தொடங்கியது.

மணாலிக்கான சாலைப் பயணம்
டெல்லியில் இருந்து சுமார் 500km பயணம். மணாலி நெடுஞ்சாலை சிறப்பாகவே இருந்தது. இனிய பாடல்களுடன் கார் பயணம் இதமாக இருந்தது. பயணத்தின் நடுவே வந்த பஞ்சாப் நகரங்கள் மொஹாலி மற்றும் சண்டிகர் மிகவும் அழகு. வான் உயர்ந்த கட்டிடங்கள் இரவில் ஜொலித்தன. இரவு உணவை ஒரு பஞ்சாபி தாபாவில் முடித்தோம். இடையில் எங்கள் ஓட்டுனரும் ஒரு சிறிய உறக்கம் மேற்கொண்டார். சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் பயணம் தொடங்கியது.
குலுவில் சாகசங்கள்
மறுநாள் காலை.. கண் விழித்து பார்த்தால் சுற்றிலும் மலைகள் ரம்யமாக காட்சி அளித்தது . ஆம்.. நங்கள் சுமார் காலை 6.30 மணி அளவில் குலு வந்தடைந்தோம்.அது அக்டோபர் மாதம் என்பதால் குளிர் பெரிதாக இல்லை. ஆனால் இதமாக இருந்தது. ஓட்டுநர் எங்களை ஒரு சிறிய ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தார்.அதை ஹோட்டல் என்று சொல்ல முடியாது.மலைகளின் நடுவே உள்ள சமவெளியில் டென்ட் அடித்து அறைகள் அமைத்திருந்தார்கள்.
காலை refresh செய்து கொண்டு சிற்றுண்டியையும் அங்கேயே முடித்தோம். குலுவில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் மிகவும் பிரசித்தி. நாங்களும் 3 முதல் 4 விளையாட்டுகள் அடங்கிய ஒரு package எடுத்து கொண்டோம். சுமார் 15000 வரை ஆனது. அது offseason என்பதால் விலை சற்று பேரம் பேசி வாங்கினோம்.

முதலில் river rafting செய்தோம். மலைகளின் வழியே ஓடிவரும் ஆற்றின் மேல் காற்று படகில் சவாரி. ஆறு கண்ணாடி போல் மின்னியது மற்றும் கடும் குளிராகவும் இருந்தது. Instructor எங்களை சரியாக வழிநடத்தினார்.குளிர் காற்று கன்னங்களை வருடியது.15kms ஆற்றில் சாகசம் செய்தோம்.அடுத்து பாராக்ளிடிங். எங்களை ஜீப்பில் ஒரு மலையின் உச்சிக்கு அழைத்து சென்றார்கள்.வழி எங்கும் கரடு முரடான சாலைகள் சற்று திகிளை கிளப்பியது.அடுத்து ஒவ்வருவராக பாராக்ளிடிங் செய்தோம்.
வானில் பறப்பது சொல்ல முடியாத அனுபவம்.20நிமிடம் வானில் பறந்து சாகசம் செய்தோம்.இப்படியாக விளையாட்டுகள் முடிந்தன. மாலையில் ஒரு சிறிய ஷாப்பிங் செய்தோம்.அது முடித்து அங்கிருந்து மணாலி புறப்பட்டோம்.
ரோதங் பாஸ் – பனி பரிசு!
சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு மணாலியை அடைந்தோம். இரவு எட்டு மணி ஆகிக்கொண்டிருந்தது. ஏற்கனவே மிகவும் களைப்பில் இருந்ததால் இரவு எங்கும் செல்ல முடியவில்லை. மறு நாள் ரோதங் பாஸ் செல்ல முடிவு செய்தோம்.
ரோதங் பாஸ் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி உண்டு. பனி காலத்தில் சாலைகள் முற்றிலும் பயணத்திற்கு உகந்தவையாக இருக்காது. ஆகவே அந்த மாதங்களில் அனுமதி இல்லை.எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மறு நாள் காலை ரோதங் பாஸ் கிளம்பினோம். மணாலியில் இருந்து ரோதங் பாஸ் சுமார் 55km மலைகளின் நடுவே பயணம் மேற்கொள்ள வேண்டும்.இந்த பயணம் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சென்று வந்து விடவேண்டும்.
அவ்வுளவு அழகு. மலைகள் அனைத்தும் கண் கொள்ளா காட்சி. மனதை வருடும். இறுதியாக ரோதங் பாஸ் அடைந்தோம். கடும் குளிர். சுமார் 3டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது. சுற்றிலும் மலைகளே.மனதை கொள்ளை கொண்டன. சாலை லே மற்றும் லடாக்கை இணைத்தது.
ஒரு சிறிய மலையின் உச்சிற்கு குதிரை மூலம் அழைத்து சென்றார்கள். மலை உச்சி சிலிர்க்க வைத்தது. கடும் குளிரினால் பத்து நிமிடத்திற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அதற்குள் மூக்கில் இருந்து நீர் வடிய ஆரம்பித்தது. இறுதியாக அங்கிருந்து கிளம்பினோம். மணாலி வரும் வழியில் புதிதாக கட்டப்பட்ட அடல் tunnel சென்றோம். மிகவும் சிறப்பாக இருந்தது. சில பல புகைப்படங்களை எடுத்து கொண்டு புறப்பட்டோம்.
மணாலி ஷாப்பிங் & பிரசித்தி
அடுத்த நாள் காலை Hathimba தேவி கோவில் மற்றும் சில அருகில் உள்ள இடங்களுக்கு சென்று கண்டு களித்தோம். Mall Street இல் ஷாப்பிங் செய்தோம். விலை ஒன்றும் அவ்வுளவு மலிவு இல்லை. தேவையானவற்றை மட்டும் வாங்கினோம். ஹிமாச்சலின் பிரசித்தி பெற்ற ஆப்பிள்கள் இரண்டு பெட்டிகள் வாங்கினோம். விலை சற்று மலிவே. அனைத்தையும் வாங்கிக்கொன்டு ஹோட்டல் அடைந்தோம்.

முடிவின் கணம்
இறுதியாக நாங்கள் மீண்டும் ஊருக்கு கிளம்பும் நேரம் வந்தது. மணாலிக்கு பிரியா விடை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம். மீண்டும் ஒரு பெரிய பயணத்திற்கு பிறகு டெல்லியை அடைந்து அங்கிருந்து சென்னை வந்தடைந்தோம்.
மணாலி உங்கள் மனதை உருக்கும். மறக்க முடியாத பேரனுபவத்தை தரும். நீங்களும் ஒருமுறை சென்றுவாருங்கள்... நன்றி
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.