செய்திகள் :

பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ..

post image

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35 பேர்தான் கூட முடியும் என்ற நிலையில், சுமார் 3 லட்சம் பேர் அரங்குக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வர முயன்றதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியிருக்கிறார். இதற்குக் காரணம் வெறும் 35 ஆயிரம் பேர்தான் நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க மாலை 5 மணியளவில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

வெறும் 35 ஆயிரம் பேர் மட்டுமே அந்த அரங்குக்குள் இருக்க முடியும். நுழைவு வாயில்கள் மூடப்பட்டுவிட்டன. கையில் டிக்கெட் இல்லாத ரசிகர்கள் வாயிலில் நிக்க வைக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்துக்கு மேல், நுழைவு வாயில்களை உடைத்துக்கொண்டும், தாண்டி குதித்தும் ரசிகர்கள் விளையாட்டு அரங்குக்குள் நுழைய முயன்ற போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

பெரிய அளவில் அதுவும் இளைஞர்கள் கூட்டம். அவர்களது கட்டுக்கடங்காத வேகம், ஒருவரை கீழேத் தள்ளினாலும் அது அடுத்தடுத்து பலரைக் கீழே தள்ளி அவர்கள் மீது பலர் ஏறி மிதித்து ஓட, அவர்களும் விழ, சம்பவம் கைமீறியது.

இதில் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழந்து வலியானவர்கள்தான்.

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களின் ரூ. 4.58 கோடி கையாடல்! முதலீடு செய்த வங்கி மேலாளர் கைது

ராஜஸ்தானில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்த வங்கி மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் தனியார் வங்கியின் வாடிக்கையாளர்களின் பணத்தைக் கையாடல் செய்... மேலும் பார்க்க

நாட்டில் தொடரும் கரோனா பரவல்! தில்லியில் புதியதாக 30 பேருக்கு பாதிப்பு!

புது தில்லியில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க