Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா
நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசிகர்கள் பற்றியும் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்டிருக்கும் பதிவில், 'இந்த சீசன் விரும்பியபடி முடியவில்லை. ஆனால், இந்தப் பயணம் அற்புதமாக இருந்தது. எங்களின் இளம் பஞ்சாப் அணியினர் காட்டிய போராட்டமும், உறுதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் முன் நின்று வழிநடத்திய விதமும், இந்தியாவின் புதிய வீரர்கள் இந்த ஐபிஎல்-ஐ ஆதிக்கம் செலுத்திய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. முக்கிய வீரர்கள் காயம் மற்றும் வேறு சில காரணங்களால் இடையில் வெளியேறினர். போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, உள்ளூர் ஆட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்றினார்கள்.

எல்லாவற்றையும் கடந்து ஒரு தசாப்தத்திற்கு பிறகு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, ஒரு அற்புதமான இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடினோம்.
ஒவ்வொரு வீரரும் அந்த இறுதிப்போட்டியில் காட்டிய விடாப்பிடியான குணத்திற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும், எங்கள் அணியின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த அற்புதமான சீசனுக்காக ஒரு பெரிய நன்றி.

நாம் இன்று இருக்கும் இடமும், இவ்வளவு தூர பயணமும் உங்கள் ஆதரவால் மட்டுமே சாத்தியப்பட்டது. நம்முடைய வேலை இன்னும் பாதி மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு மைதானத்தில் சந்திப்போம், அதுவரை எல்லோரும் பத்திரமாக இருங்கள். உங்கள் எல்லாருக்கும் என் அன்பும் நன்றியும்!' எனக் கூறியிருக்கிறார்.