செய்திகள் :

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

post image

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசிகர்கள் பற்றியும் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்டிருக்கும் பதிவில், 'இந்த சீசன் விரும்பியபடி முடியவில்லை. ஆனால், இந்தப் பயணம் அற்புதமாக இருந்தது. எங்களின் இளம் பஞ்சாப் அணியினர் காட்டிய போராட்டமும், உறுதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கள் கேப்டன் ஸ்ரேயாஸ் முன் நின்று வழிநடத்திய விதமும், இந்தியாவின் புதிய வீரர்கள் இந்த ஐபிஎல்-ஐ ஆதிக்கம் செலுத்திய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமானது. முக்கிய வீரர்கள் காயம் மற்றும் வேறு சில காரணங்களால் இடையில் வெளியேறினர். போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, உள்ளூர் ஆட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்றினார்கள்.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா

எல்லாவற்றையும் கடந்து ஒரு தசாப்தத்திற்கு பிறகு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, ஒரு அற்புதமான இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடினோம்.

ஒவ்வொரு வீரரும் அந்த இறுதிப்போட்டியில் காட்டிய விடாப்பிடியான குணத்திற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும், எங்கள் அணியின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த அற்புதமான சீசனுக்காக ஒரு பெரிய நன்றி.

ப்ரீத்தி ஜிந்தா
ப்ரீத்தி ஜிந்தா

நாம் இன்று இருக்கும் இடமும், இவ்வளவு தூர பயணமும் உங்கள் ஆதரவால் மட்டுமே சாத்தியப்பட்டது. நம்முடைய வேலை இன்னும் பாதி மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு மைதானத்தில் சந்திப்போம், அதுவரை எல்லோரும் பத்திரமாக இருங்கள். உங்கள் எல்லாருக்கும் என் அன்பும் நன்றியும்!' எனக் கூறியிருக்கிறார்.

ஆர்மினியா செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!; நூலிழையில் தவறவிட்ட பிரக்ஞானந்தா

ஆர்மீனியா நாட்டின் ஜெர்முக்கில் கடந்த மே 29-ம் தேதி, 6-வது ஸ்டீபன் அவக்யான் நினைவு செஸ் தொடர் (Stepan Avagyan Memorial chess tournament) தொடங்கியது.இதில், இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்... மேலும் பார்க்க

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட் கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கே... மேலும் பார்க்க

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க