செய்திகள் :

TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி

post image

டிஎன்பிஎல் கிரிக்கெட் கோவை எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் பௌலிங்கைத் தேர்வு செய்தார்.

கோவை அணிக்குக் கடந்த காலங்களில் பேட்டிங் தூணாக இருந்த சாய் சுதர்சன் இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

லைகா கோவை கிங்ஸ் அணி
லைகா கோவை கிங்ஸ் அணி

அவர் இல்லாதது கோவை அணிக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு என்பது முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது. பவர் பிளேயில் கூட கோவை அணிக்குப் போதுமான பௌண்டரிகள் வரவில்லை.

மூன்றாவது ஓவரில்தான் முதல் பௌண்டரியே வந்தது. திண்டுக்கல் அணியின் சந்தீப் வாரியர், அஸ்வின் சிறப்பாக பந்து வீசி கோவைக்கு நெருக்கடி கொடுத்தனர்.

பவர் பிளே முடிவதற்குள்ளேயே அந்த அணியின் ஓப்பனர்கள் இருவரும் அவுட்டாகினர். இதையடுத்து சச்சின் பேபி, நடப்பு ஐபிஎல் சிசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ்
திண்டுக்கல் டிராகன்ஸ்

சச்சின் பௌண்டரிகளை விளாச, சித்தார்த் நிலைத்து நின்றார். சித்தார்த் கொடுத்த கேட்ச்சை திண்டுக்கல் அணியின் சிவம் சிங் டிராப் செய்ய, அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சித்தார்த் 25 ரன்களில் அவுட் ஆனார். மிடில் ஓவர்களில் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி சிறப்பாக வீசினர்.

திண்டுக்கல் அணி ஃபீல்டிங்கிலும் நன்றாகச் செயல்பட்டு சில பௌண்ட்ரிகளை தடுத்தனர். சச்சின் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 இன்னிங்ஸ்களில் அவர் 5 அரை சதம் அடித்துள்ளார்.

கோவை அணி

நெருக்கடியான சூழலில் களமிறங்கிய கோவை அணி கேப்டன் ஷாருக்கானால் சில பௌண்டரிகளை மட்டுமே அடிக்க முடிந்தது.

ஷாருக் 25 ரன்களில் அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணிக்கு சந்தீப், அஸ்வின், பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி ஆரம்பத்திலிருந்தே பாசிட்டிவாக அடித்து ஆடியது. அஸ்வின் ஓப்பனிங் பேட்ஸ்மெனாக களமிறங்கி ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து அவுட் ஆனார்.

கடந்த டிஎன்பிஎல் சீஸனில் அதிக ரன் எடுத்த சிவம் சிங், விமல்குமார் இணை நிலைத்து நின்று ஆடினர். சீரான இடைவெளியில் பௌண்டரிகளை அடித்து சேஸிங்கை எளிமையாக்கினார்கள்.

திண்டுக்கல் பேட்டிங்
திண்டுக்கல் பேட்டிங்

விமல் 28 ரன்களில் ஆட்டமிழந்தாலும் திண்டுக்கல் அணிக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கோவை அணியின் ஃபீல்டிங் ரொம்பவே சுமாராக இருந்ததும் திண்டுக்கல்லுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

முக்கியமாக சிவம் சிங் கடந்த சீஸனில் விட்ட அதே ஃபார்மில் ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார். சிவம் 82 ரன்கள் விளாச, திண்டுக்கல் அணி 17.2 ஓவர்களிலேயே டார்கெட்டை சேஸ் செய்து வெற்றியுடன் சீஸனை தொடங்கியுள்ளது.

இந்த அரை சதத்துடன் சிவம் டிஎன்பிஎல் போட்டிகளில் 8 அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

சிவம் சிங்
சிவம் சிங்

கோவை அணி சார்பில் ஷாருக்கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக ஆடிய சிவம் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

'விஜய் மல்லையா பேட்டி...'பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா 'ராஜ் சமானி' (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்க... மேலும் பார்க்க

Preity Zinta : 'நீங்க இல்லாம நாங்க இல்ல...' - நெகிழும் ப்ரீத்தி ஜிந்தா

நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் ஆகியிருந்தது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அந்த அணியின் வீரர்கள் பற்றியும் ரசி... மேலும் பார்க்க

IPL : 'இளம் வீரர்களுக்கு எதற்கு அத்தனை கோடிகள்?' - கவாஸ்கர் காட்டம்!

ஐ.பி.எல் இல் ஆடும் இளம் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுப்பது பெரிய பலனை அளிப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க

RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச்சி

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக... மேலும் பார்க்க