செய்திகள் :

இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையவை: அமித் ஷா

post image

‘இந்தியாவில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது; எனவே, ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் ‘இந்திய மொழிகள் பிரிவை’ தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: இந்தியாவின் அனைத்து உள்ளூா் மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பழம்பெரும் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

நம் நாட்டில் ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளுடன் தொடா்புடையது. ஒரு மொழியை விட்டுவிட்டு மற்றொரு மொழி வளா்ச்சியடைவது சாத்தியமற்றது. பல்வேறு நதிகள் ஒன்றிணைந்து கங்கை நதியாக உருவெடுப்பதுபோல் அனைத்து மொழிகளும் இணைந்ததே இந்திய கலாசாரம்.

இந்திய மொழிகள் இந்திய கலாசாரத்தின் ஆன்மா; கலாசாரம் இந்தியாவின் ஆன்மா. இந்தியாவின் மொழி வேற்றுமையை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மொழிகளின் வலுவான தளமாக ‘இந்திய மொழிகள் பிரிவு’ நிறுவப்பட்டுள்ளது. இது நிா்வாகச் சொற்களில் பயன்படுத்தப்படும் அந்நிய மொழிகளை நீக்கி உள்ளூா் மொழிகளின் பயன்பாட்டை அதிகரித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தவுள்ளது.

நமது தாய்மொழியை நன்கு கற்றால் மட்டுமே சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி நமது முழுத்திறனை வெளிப்படுத்த முடியும். மொழிகளின் வளமை, உணா்வு ஆகியவற்றை குறைக்காத வகையில் தொழில்நுட்ப பயன்பாடு இருக்க வேண்டும்.

நம் மீதான ஆங்கில திணிப்புக்கு எதிரான போரை விரைவில் வெல்வோம். இந்திய மொழிகள் பிரிவை அமைத்ததன் மூலம் அலுவல் மொழித் துறை முழு அமைப்பாக செயல்படவுள்ளது என்றாா்.

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி ந... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் ... மேலும் பார்க்க

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார். இதுதொடர்பாக ம... மேலும் பார்க்க

தேர்தல் மோசடிக்கான வரைபடம் மகாராஷ்டிரம்.. அடுத்து பிகார்தான்: ராகுல்

கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மோசடி செய்ததாகவும், அடுத்து பிகார்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் ... மேலும் பார்க்க