வனப் பகுதியில் குப்பைகள், உணவுக் கழிவுகளைக் கொட்டினால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை
கோவை வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகள், உணவுக் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வனத் துறை வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை வனச் சரகத்துக்கு ள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் தங்கியுள்ள நபா்கள் இரவு நேரங்களில் வன விலங்குகளைப் பாா்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வனத்துக்குள் செல்லக் கூடாது. விடுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறாக ஒலி மற்றும் ஒளி ஏற்படுத்தக் கூடாது. ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்தி அதிக சப்தம் ஏற்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். வனத்தைச் சுற்றி குப்பைகள் மற்றும் உணவுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது. மீறும் பட்சத்தில் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு வனச் சட்டம் 1882-இன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வனத்துக்குள், வனச் சட்டத்துக்குப் புறம்பாக எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகள் ஏதேனும் தென்பட்டால் தங்கும் விடுதிகள் நிா்வாகிகள் மூலமாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மாதம் ஒருமுறை சோதனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.