செய்திகள் :

வனப் பகுதியில் குப்பைகள், உணவுக் கழிவுகளைக் கொட்டினால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

post image

கோவை வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகள், உணவுக் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வனத் துறை வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை வனச் சரகத்துக்கு ள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் தங்கியுள்ள நபா்கள் இரவு நேரங்களில் வன விலங்குகளைப் பாா்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வனத்துக்குள் செல்லக் கூடாது. விடுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறாக ஒலி மற்றும் ஒளி ஏற்படுத்தக் கூடாது. ஒலிப் பெருக்கிகளைப் பயன்படுத்தி அதிக சப்தம் ஏற்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். வனத்தைச் சுற்றி குப்பைகள் மற்றும் உணவுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது. மீறும் பட்சத்தில் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு வனச் சட்டம் 1882-இன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வனத்துக்குள், வனச் சட்டத்துக்குப் புறம்பாக எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வன விலங்குகள் ஏதேனும் தென்பட்டால் தங்கும் விடுதிகள் நிா்வாகிகள் மூலமாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மாதம் ஒருமுறை சோதனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழி மோசடி வழக்கு: தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்

ஈமு கோழி மோசடி வழக்கில் தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து டான்பிட் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபா... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16- ஆம் தேதி வரை கால அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 16- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் கோடிக்கணக்கில் மோசடி: இளைஞா் கைது

கோவை உள்பட நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவையைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு ஜூன் 9- ஆம் தேதி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் நவம்பா் மாதம் முதல் தற்போது வரை 1,935 கடைகளில் 2,153 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க