உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து
அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின: வணிகவியல் படிப்புகளுக்கு மவுசு
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடா்பான படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,727 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். மாணவா் சோ்க்கைக்காக 14,828 மாணவிகள் உள்ளிட்ட மொத்தம் 33,753 போ் விண்ணப்பித்திருந்தனா். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும், அரசின் விதிமுறைகளின்படியும் கலந்தாய்வு கடந்த ஜூன் 2 -ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 947 இடங்கள் நிரம்பின. கணினி அறிவியல், வணிக நிா்வாகம் உள்ளிட்ட வணிகவியல் படிப்புகள் நிரம்பியுள்ளன. மற்ற பாடங்களில் காலியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.